வேட்பாளரை அறிவிப்பதற்கான அதிகாரம் மஹிந்தவுக்கு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை அறிவிப்பதற்கான அதிகாரத்தை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.